வீழ்கிறோம் என்று எண்ணி வருந்தினால் நீர்விழ்ச்சியால் வற்றாத ஜீவநதியாக ஓடி தன் இலக்கான கடலை அடைய முடியாது…..ஒரு நாளிலே பூத்து மடிந்து விடுவோம் என்று வருந்தினால் பூக்களால் மணம் வீசி நம் மனங்களை கவர்ந்திட முடியாது…. வாய்ப்புகளில் இருக்கும் கஷ்டத்தை பார்த்தால் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது. வாய்ப்புகள் உங்கள் வாசல் கதவை தட்டும் என்று எதிர்பார்த்து வீணாக காலத்தை தள்ளாது உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள் ஏனென்றால் வாய்ப்புகள் எப்போதுமே தானாக அமைந்தும் விடாது, நாமாகத்தான் உருவாக்கியாக வேண்டும்.
முயற்சித்தால் ஒரு கட்டெறும்பால் கரும்பையே சுமந்து செல்ல முடியும் என்றால், பொறுமையோடு போராடி கம்பளிப்புழு பட்டாம்பூச்சி ஆகும் என்றால், சர்வ சம்பூர்ணமான மனிதனால் முடியாது என்பது எதுவும் இருக்க முடியுமா? சாதனைகள் என்று நாம் அதிசயித்து பார்க்கும் அனைத்துமே உங்களையும் என்னையும் போன்ற யாரோ ஒரு மனிதனின் முயற்சியின் அடையாளமே! முயற்சிக்காத வரை எதுவுமே சாத்தியமாகாது! ஆக, முயற்சி!! முயற்சிக்காமல் முடியாது என்று சொல்வதை மாற்றி..முயற்சித்து முடிவு காண்போம்!
நம்மிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள வாய்ப்பு இல்லை ராஜா என்ற பஞ்ச்க்கு இனி வாய்ப்பு இல்லாமல் செய்வோம்!!