கண்ணை பார்த்து பேசுகையில் கழுத்துக்கு கீழ் நீளும் பார்வைகளை அவள் எவ்வாறு தடுப்பாள்?.....உடைகளின் சரிவுகளில் உடல் வளைவுகளில் வழுக்கும் எண்ணங்களை அவள் எவ்வாறு நிறுத்துவாள்?.....உணர்வுகளை விட உடலுக்கு முக்கியம் கொடுக்கும் உறவுகளுக்கு அவள் எவ்வாறு புரிய வைப்பாள்?.....அவளது சாதனைகளை சமையலறைக்குள் முடக்கி விட துடிக்கும் ஆளுமைகளுக்கு அவள் எவ்வாறு பதில் கொடுப்பாள்?....ஆழ நினைக்கும் அவளை அழ வைத்து பார்க்கும் சமூகத்தை அவள் எவ்வாறு மாற்றுவாள்?.....எவ்வாறு எவ்வாறு எவ்வாறு??? -அவளிடம் ஒரு நிமிடம்-நீ பூவின் வடிவில் வளரும் புயல்…எரிக்கும் … Continue reading அவளிடம் ஒரு நிமிடம்
அவள் இல்லை அவள் !!
உதடுகளை உத்து ரசிக்கையில் அவை சொல்ல துடிக்கும் வார்த்தைகளை புரிந்து கொள்ளுங்கள்!மார்பகங்களை மயங்கி பார்க்கையில் அதன் உள்ளிருக்கும் மனதை நேசியுங்கள்!சேலை ஓரம் தெரியும் இடை வளைவுகளில் வழுக்க நினைக்கையில் மாதம் மூன்று அதன் வலி உணருங்கள்!நெரிசலில் உரசி இன்புறுகையில் குடும்பத்தை காக்க ஒழுகும் வியர்வையின் பெறுமதி அறியுங்கள்!அங்கங்களை அங்குலம் அங்குலமாக வர்ணித்து கவிக்கு சுவைக் கொடுக்கும் வெறும் அடைமொழியாக அவளை பார்க்காதீர்கள் !வேதங்களும் சாஸ்திரங்களும் காணாத வண்மை அவள் மொழியில் உண்டு!சரித்திரங்களிலும் இதிகாசங்களிலும் கடந்து போன உறுதி … Continue reading அவள் இல்லை அவள் !!
முழுமையாய் பிறந்ததாலோ அவஸ்தை? 🤔
கூனாய் பிறந்திருந்தால்உங்களை எதிர்த்துநின்றிருக்க மாட்டேன்!குருடாய் பிறந்திருந்தால்உங்கள் பாரபட்சங்களைகண்டிருக்க மாட்டேன்!செவிடாய் பிறந்திருந்தால்உங்கள் ஏச்சுப்பேச்சுகளைகேட்டிருக்க மாட்டேன்!ஊமையாய் பிறந்திருந்தால்உங்களிடம் எதிர்த்துப்பேசியிருக்க மாட்டேன்!பேதையாய் பிறந்திருந்தால்என் கோபதாபங்களை உணர்ந்துவெளிகாட்டியிருக்க மாட்டேன்!முட்டாளாய் பிறந்திருந்தால்உங்கள் தவறுகளைஅறிந்திருக்க மாட்டேன்!ஐயகோ!!!நானோ ஆறறிவும்முழுதாய் பெற்ற முழு மனிதி அல்லவா!?!அதனால்தானோ இத்தனைஅவஸ்தைகள் பூமியிலே???😣😣~ Moni ~
LOADING your Article………….
Send your Articles or opinion உங்கள் கட்டுரைகள் அல்லது கருத்தை அனுப்பவும்........ singappenny@gmail.com THANKS FOR VISITING , KEEP IN READ.
You must be logged in to post a comment.