கூனாய் பிறந்திருந்தால்
உங்களை எதிர்த்து
நின்றிருக்க மாட்டேன்!
குருடாய் பிறந்திருந்தால்
உங்கள் பாரபட்சங்களை
கண்டிருக்க மாட்டேன்!
செவிடாய் பிறந்திருந்தால்
உங்கள் ஏச்சுப்பேச்சுகளை
கேட்டிருக்க மாட்டேன்!
ஊமையாய் பிறந்திருந்தால்
உங்களிடம் எதிர்த்துப்
பேசியிருக்க மாட்டேன்!
பேதையாய் பிறந்திருந்தால்
என் கோபதாபங்களை
உணர்ந்து
வெளிகாட்டியிருக்க மாட்டேன்!
முட்டாளாய் பிறந்திருந்தால்
உங்கள் தவறுகளை
அறிந்திருக்க மாட்டேன்!
ஐயகோ!!!
நானோ ஆறறிவும்
முழுதாய் பெற்ற
முழு மனிதி அல்லவா!?!
அதனால்தானோ இத்தனை
அவஸ்தைகள் பூமியிலே???😣😣
~ Moni ~
