அவள் இல்லை அவள் !!

உதடுகளை உத்து ரசிக்கையில் அவை சொல்ல துடிக்கும் வார்த்தைகளை புரிந்து கொள்ளுங்கள்!
மார்பகங்களை மயங்கி பார்க்கையில் அதன் உள்ளிருக்கும் மனதை நேசியுங்கள்!
சேலை ஓரம் தெரியும் இடை வளைவுகளில் வழுக்க நினைக்கையில் மாதம் மூன்று அதன் வலி உணருங்கள்!நெரிசலில் உரசி இன்புறுகையில் குடும்பத்தை காக்க ஒழுகும் வியர்வையின் பெறுமதி அறியுங்கள்!
அங்கங்களை அங்குலம் அங்குலமாக வர்ணித்து கவிக்கு சுவைக் கொடுக்கும் வெறும் அடைமொழியாக அவளை பார்க்காதீர்கள் !
வேதங்களும் சாஸ்திரங்களும் காணாத வண்மை அவள் மொழியில் உண்டு!
சரித்திரங்களிலும் இதிகாசங்களிலும் கடந்து போன உறுதி அவள் உணர்வில் உண்டு!
அவள் உங்கள் கற்பனையில் தெரியும் ரதி மட்டும் அல்ல…
உங்கள் சிந்தனைகளுக்கு புலப்படாத சிற்பம்!

-MONI-

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் !!!!

Leave a comment